நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, July 28, 2013

மனிதம் தொலைத்த மதம்- மதம் பிடித்த மனிதன்

நண்பர்களே, தயவுசெய்து இந்த கட்டுரையை படிக்கவும் - மதம் குறித்து எனது பார்வை

       சமீப காலமாக என் மனதில் மிகுந்த அச்சத்தையும், துயரத்தையும் உண்டாக்கிய ஒரு விடயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் ( Facebook, Twitter) பகிரப்படும் மதம் சார்பான கருத்துக்களே.
       ஒருவர் தன் மதத்தைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம், எழுதலாம். அது ஆரோக்கியமானதும் கூட, ஆனால் அதில் மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதும், இகழ்ந்து எழுதுவதும் மிகவும் அபாயகரமானது. கண்டனத்துக்கிரியது. மிக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது இந்து - முஸ்லிம் பற்றியே. இதனால் நம்மிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி மதத்தின் பெயரால் உண்டாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலரது அரசியல் நோக்கத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்து - முஸ்லிம் வெறுப்புணர்ச்சி உண்டாக்கப்படுகிறது.
         
       இதனால் நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுசெல்வது என்ன? ஏற்கனவே வருங்காலத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். குறிப்பாக குடிநீர் தடுப்பாடு, புவி வெப்பமயமாதல் - பருவ நிலை மாற்றம், பொருளாதார சிக்கல், மக்கள் தொகைப்பெருக்கம். இதனுடன் அவர்களது மனதிலும் மதம் என்னும் மதத்தை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மனிதம் கொண்டு எதிர்வரும் சிக்கல்களை ஒன்றிணைந்து களைய போராட வேண்டுமா? சிந்தியுங்கள் நண்பர்களே. தயவுசெய்து மற்ற மதங்களைப் பற்றி இகழ்ந்து கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மற்ற மதத்தினருடன் சகோதரத்துவுடன் பழகுங்கள், அவர்களது மதத்தையும் மதித்து மனிதத்தைப் பேணுங்கள்.ஒருவருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்றால், அது அநீதி என்று தெரியும் பட்சத்தில் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், மற்ற மதத்தை சார்ந்தவரும் அந்த அநீதிக்கு எதிராக போராடும் சிறந்த குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். மாறாக என் மதத்தை சேர்ந்தவனுக்கு மட்டுமே நான் போராடுவேன் என்று சொல்வது மனிததன்மையற்ற செயல். எந்த கடவுளும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

                  குறிப்பாக சமீபத்தில் ஒரு பா ஜா கா அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சிறுது நிமிடத்தில் அதற்கு அரேபிய வந்தேறிகள்தான்(முஸ்லிம்) காரணமென்று சிலரால் பரப்பப்படுகிறது, அவரது கொலைக்கு காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் அல்லது வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாக கூட இருக்கலாம். அல்லது அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலையுண்டார் என்றால், கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்த கடவுளும் மதத்தின் பெயரால் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார், அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் கடவுளாக இருக்க முடியாது.
            கொலைக்கான உண்மைக் காரணம் விசாரிக்கப்பட்டு, விரைவில் வெளிவரும். அதற்கு முன்னர் மற்ற மதத்தினரை குறைக்கூறுவது, ஒட்டுமொத்த மதத்தையும் தவறாக சித்தரிப்பது போன்ற காரியங்களை தவிர்ப்போம். இல்லையேல், மதவெறி மக்கள் மனதில் பதிந்து, மிகப்பெரிய கலவரத்திக்கு வழிவகுக்கும். வேண்டாம் இனி ஒரு மதக்கலவரம். ஏற்கனவே மதத்தின் பெயரால் பல குடும்பங்கள் நிர்மூலமானது, பலரது வாழ்க்கை நாசமானது. இனி வரும் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழ , அமைதியான சூழலை உண்டாக்க முயர்ச்சிப்போமாக.

     ஒரு நாள் வரும், மதம் என்னும் மாயை அழிந்து மனிதம் என்னும் மகத்தான புள்ளியில் நம் அனைவரும் ஒண்றினைந்து வாழும் அந்நாளிற்கான விடியலை நோக்கி நம் பயணப்பட இறைவன் நமக்கு அருள்புரிவானாக.


இப்படிக்கு
காஜா

No comments:

Post a Comment