நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, August 5, 2012

நாங்களும் தமிழர்தாங்கோ


வணக்கம் நண்பர்களே, வேலைபளு காரணமாக வெகு நாட்கள் கழித்து ப்ளாக் எழுத வந்திருக்கே. இந்த முறை என் மனச உறுத்துன ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப்போறேன்.

 நாங்க வசிக்கிற பகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் குடும்பங்கள்தான் அதிகம், ஒன்றிரண்டு இந்துக்கள் குடும்பங்களும் வசிக்கிறாங்க. அதுல என்னுடைய நீண்ட கால நண்பனோட குடும்பமும் ஒன்று.

பொதுவாக அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களோட( Mosque) வளர்ச்சி பணிகளுக்காக , ஓவ்வொரு முஸ்லிம்களோட வீடுகளிலும் சந்தா தொகைன்னு ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுவதுண்டு. ஒரு முறை தவறுதலாக என்னோட நண்பனோட வீட்டுக்கும் போய் கேட்டுருக்காங்க, அதுக்கு அவன் நாங்க                     " தமிழர்கள்" ன்னு சொல்லவும், வந்தவங்க தவறுதலா வந்துட்டோம்னு சொல்லிட்டு அடுத்த வீட்ட நோக்கி போய்ட்டாங்க. இந்த விஷயத்த நண்பன் எங்கிட்ட சொன்னப்ப, நான் ஆச்சர்யத்தோட திருப்பிக் கேட்டேன், அப்ப அவ சொன்ன விஷயம் எனக்கு உறுத்தலா இருந்துச்சு, அதாவது பொதுவா " தமிழர்கள்" னா இந்துக்கள்னு அர்த்தமாம்.

நான் என் நண்பனிடம் திருப்பிக் கேட்டேன், அது எப்படி " தமிழர்கள்" னா இந்துக்கள்னு ஆகும், நாங்களும் தமிழர்கள்தான், எங்களுக்கும் " தமிழ்" தவிர்த்து வேறு மொழி தெரியாது, தமிழ்நாட்டோட கலாச்சாரத்தையும், பழக்கவழக்கத்தையும்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். மதத்தால வேறுபட்டாலும் , இனத்தால நாமெல்லாரும் ஒன்றுதான். அப்படியிருக்கும்போது  "தமிழர்கள்"னு சொல்லும்போது, அது எப்படி இந்துக்கள மட்டும் குறிக்கும்னு நான் கேட்டப்ப அதுல உள்ள உண்மைய உணர்ந்து இனிமே திருத்திக்கிறேன்னு சொன்னான்.

என்ன பொருத்தவரைக்கும், ஒரு மனிதனோட அடையாளம், அவனோட "மதம்" இல்லை, "இனம்"தான் அவனோட அடையாளம்.நான் "தமிழினம்" அப்படின்னு சொல்லும்போதுதான் நான் பெருமபடுறேன். நான் வெளிநாட்டுல வேலை பார்க்குறேன், பொதுவா யாராவது என்னைப் பற்றிக் கேட்டால், நான் முதல்ல " தமிழன்"ன்னு சொல்லிட்டுதான் அப்புறம் தேவைப்பட்டால் மதத்தைப் பற்றி சொல்வது என்னுடைய வழக்கம்.

கடைசியா நான் சொல்ல விருப்பபடுறது ஒன்னுதான், எங்களோட மதம்                   " வந்தேரிய" மதமா இருக்கலாம். ஆனா நாங்கள் " வந்தேரிகள்" கிடையாது. தயவுசெய்து இனத்தால ஒன்றுபட்ட எங்களை , மதத்தை முன்னிட்டு வேற்றுமை படுத்திறாங்க.

" தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா"

நன்றி வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment