நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, November 14, 2010

INCEPTION - கனவின் வேட்டை

வணக்கம் நண்பர்களே,


கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception ‎) திரைப்படத்தை இன்று பார்த்தேன் . ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று குழம்பிப் போனேன் . கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம்.


படத்தில், நிஜ வாழ்க்கையிலிருந்து ஒரு கனவிற்குள் சென்று, அந்த கனவிலிருந்து இன்னொரு கனவிற்குள் சென்று, அதன் வழியே மற்றுமொரு கனவிற்குள் செல்வது போல நான்கு கட்டங்களாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.



நான்கு கட்டங்களிலும் வரும் காட்சிகள் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிமிடமேனும் கவனம் சிதறினால் படம் நம்மை குழப்பிவிடும். அந்தளவிற்கு படத்தோடு ஒன்றி பார்த்தால்தான், படத்தை ஓரளவிற்கேனும் புரிந்துக்கொள்ள முடியும்.


என் வாழ்விலும் , இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நான் என் கனவில் ஊரிலிருக்கும் என் பாட்டி வீட்டிற்கு சென்றேன், அங்கே இரவு துக்கத்தின் போது நான் இன்னொரு கனவிற்குள் சென்றேன். அதாவது நிஜ வாழ்க்கையிலிருந்து ஒரு கனவிற்குள் சென்று, அந்த கனவிலிருந்து இன்னொரு கனவிற்குள் சென்றேன். இதை அப்பொழுது என் நண்பனிடம் சொல்லும் போது அதை அவன் நம்பவில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்த்தால் நம்புவான் எனறு நினைக்கிறேன்.

கனவு எதனால் வருகிறது, கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் விழித்தவுடன் நமக்கு முழுவதும் நினைவுருப்பதில்லை( குறிப்பாக கனவில் வரும் நிகழ்வுகளின் ஆரம்பம்). மனோதத்துவ நிபுணர் Dr. சிக்மண்ட் பிராய்டு அவர்கள் நிராசைகள்தான் பெரும்பாலும் கனவாக வருகிறது என்று கூறினார். அதுவும் உண்மைதான், நிஜ வாழ்க்கையில் ஒருவன் ஆசைக்கொண்ட நடிகையுடன் கனவில் உல்லாசமாக இருக்கிறான், ஆங்கிலம் பேச தெரியாதவன் கனவில் ஆங்கிலத்தில் பொழந்துக்கட்டுகிறான், ஏழைகள் கனவில்தான் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இப்படி கனவு ஒரு மனிதனின் நிராசைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது. ஒருவன் தன் தந்தை இறப்பதுபோல் கனவு கண்டால் அதுவும் நிராசைதானா? என்று நீங்கள் கேட்கலாம். அதாவது அவன் தந்தை இறப்பது போன்ற ஒரு எண்ணம் , ஏதோ ஒரு சூழ்நிலையில் அவன் உள்மனதில் பதிந்து அது கனவாக வருகிறது ( எ.கா : தன் நண்பனின் தந்தையின் மரணத்தின்போது , தன் தந்தையும் ஒரு நாள் இது போல் இறந்துப் போகலாம் என்ற எண்ணம் நம் உள்மனதில் பதிந்துவிடுவதால்) என்று Dr. சிக்மண்ட் பிராய்டு கனவிற்கான விளக்கத்தை மிக தெளிவாக கூறுகிறார்.


கனவு, மனிதனின் அனைத்து நிராசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக பயன்படுகிறது. நல்ல கனவே மனிதனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. Dr. அப்துல்கலாம் சொன்னதுபோல், கனவு காணுங்கள். நல்ல கனவு நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லட்டும்

நன்றி வணக்கம்..

1 comment:

  1. It is the film by which to measure the density of all others.

    ReplyDelete