வணக்கம் நண்பர்களே,
ஒரு பயனுள்ள வலைத்தளத்தைப்பற்றித்தான் இந்த பதிவு.
இன்றைய தொழில் நுட்ப உலகில், நாம் எவ்வளவு திறமையாக இருந்தாலும், நம் திறமையை உலகம் அறிய செய்யவும், பறைசாற்றவும் ஆங்கில மொழி இன்றியமையாததாகும்.
நம்மில் பலர், அயல் நாடுகளில் வேலை செய்து கொண்டு , போதிய ஆங்கில புலமை இல்லாததால் நம் திறமையை நிரூபிக்க முடியாமல் போகிறது.
அயல் நாடு மட்டுமல்ல, நம் தமிழ் நாட்டில் கூட படித்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், மதன் அவர்கள் ஆனந்த விகடனில் சொன்ன ஒரு வரி நினைவுக்கு வருகிறது,
" ஆங்கிலம் தெரிந்தால் உலகத்தில எங்க பிழைக்க முடியுமோ? இல்லையோ? தமிழ்ட்நாட்டுல ஜோரா பிழைச்சுக்கலாம்".
நமக்கு உதவுவதற்காகவே ஒரு இலவச தளம் உள்ளது.
http://aangilam.blogspot.com
இதில் தமிழ்மொழி வழியாக மிகவும் சிறப்பாகவும், எளிதாகவும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது, மேலும், ஆங்கில வரலாறு, ஆங்கில துணுக்குகள், ஆங்கிலத்தின் அன்றாட வளர்ச்சி போன்ற பயனுள்ள தகவல்களும் உள்ளது. ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களையும் நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இத்தளத்தின் உரிமையாளருக்கு உங்கள் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள், அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பேணிக்காப்போம், பிற மொழிக்கற்று, அதன் மூலம் நம் தமிழ் மொழியை உலகறிய செய்வோம்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
No comments:
Post a Comment